திருக்குறள்

517.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்.

திருக்குறள் 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்.

பொருள்:

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.